Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அட்சய திருதியும் அதன் வழிபாட்டு ... உயிர்ப்பலி கொடுக்காமல் குலதெய்வத்தை வழிபடலாமா? உயிர்ப்பலி கொடுக்காமல் ...
முதல் பக்கம் » துளிகள்
தர்ம சாஸ்திரங்கள் கூறும் பெண்களுக்கான குறிப்புகள்!
எழுத்தின் அளவு:
தர்ம சாஸ்திரங்கள் கூறும் பெண்களுக்கான குறிப்புகள்!

பதிவு செய்த நாள்

14 மே
2021
05:05

1. மெட்டி, காதணி, மூக்குத்தி, மாங்கல்யசூத்ரம் ஆகியவை கணவனின் ஆயுளை அதிகரிக்கும் மங்கள வஸ்துக்கள் என்பதால், பெண்கள் அவற்றை என்றுமே களையக்கூடாது.

2. பெண்கள் குளித்த பிறகே சமைக்க வேண்டும்.
சமையல் செய்யும்பொழுது உண்டாகும் வியர்வையைக் காரணம்காட்டி, சமைத்தபிறகு குளிப்பது தகாத செயலாகும்.

3. பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு கோலம் இடுவது, விளக்கேற்றுவது, பூஜை செய்வது, கோயிலுக்குச் செல்வது, ஆன்மீக உபன்யாசங்களுக்குச் செல்வது, திருமணம் போன்ற புனித நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, மதகுருமார்களிடம் ஆசிவாங்கச் செல்வது இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

4. பெண்கள் தலையை முடிந்து கொண்டே உணவைப் பரிமாற வேண்டும்.

5. பத்து நாட்கள் இறப்பு தீட்டு காத்த பெண்களை, ஆறுமாத காலத்திற்கு சுமங்கலி ப்ரார்த்தனைக்கு அழைக்கக்கூடாது.

6. விளையாட்டுக்குக்கூட, கணவனை ஒருமையில் அழைக்கக்கூடாது. அது கணவரது ஆயுளைக் குறைக்கும் என்பதால், அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

7. திருமணமான பெண்கள் வகிடு உச்சியில் குங்குமம் இல்லாமலும், காலின் இரண்டாவது விரலில் மெட்டி அணியாமலும் இருக்கவே கூடாது.

8. கருத்தரித்து இருக்கின்ற பெண்கள், ஊசியைப் பயன்படுத்தி, துணிகளைத் தைக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, வளர்கின்ற சிசுவைப் பாதிக்கும்.

9. கருத்தரித்து நான்கு மாதம் ஆன பெண்கள், தங்களது நகத்தை, தாங்களே வெட்டிக்கொள்ளக்கூடாது.

10.பூஜை செய்வது, புராணங்கள் வாசிப்பது போன்றவற்றை, கணவனின் அனுமதியில்லாமல் பெண்கள் செய்யக்கூடாது.
அதுவுமன்றி, அந்த நேரங்களில் கருப்புநிற ஆடைகளை அணியவும்கூடாது.

11.முந்தானையைச் செருகிக்கொண்டே, பெண்கள் கோயிலில் இறைதரிசனம் செய்ய வேண்டும்.

12.நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டு காசி, ராமேஸ்வரம், நவப்ருந்தாவனம் போன்ற புனிதஇடங்களுக்கு யாத்திரைகள் செல்லக்கூடாது. அப்படிச்செல்வது முழுபலனைப் பெற்றுத் தராது.

13.வீடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் இருந்தால், காசி, ராமேஸ்வர யாத்ரிரைகள் செல்வதும், எள்ளைக் கொண்டு செய்கின்ற (திலஹோமம்) ஹோமங்களும் செய்யக்கூடாது.

14.கரிநாளன்று தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது.

15.வெளியில் கிளம்பும்போது தெற்கு திசையில் முதலில் நகராமல், சில அடிகள் வடக்குநோக்கி வைத்துவிட்டு, பிறகு தொடர வேண்டும்.
அப்படிச் செய்வது, நாம் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றியையும், வளத்தையும் கொடுக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற பலமுறி கணபதி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தாய் மனம் குளிர தமிழில் அர்ச்சனை நடக்கும் பெருமைக்குரியது ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இது, ... மேலும்
 
temple news
பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. வரலாற்று ... மேலும்
 
temple news
நகரத்திற்குள் பழமையான கோவில்கள் இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட பழமையான கர்நாடக கோவில்கள் பற்றி ... மேலும்
 
temple news
பெங்களூரு – கனகபுரா பிரதான சாலையில், சுப்பிரமண்யபுரா வசந்தபுராவின் குப்தகிரி மலையில், ஸ்ரீவசந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar