Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையான் கோவில் ஜூன் ஒதுக்கீடு ... வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் வசந்த உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில் சொத்துக்கள் விவகாரம்: அரசுக்கு பாராட்டு
எழுத்தின் அளவு:
தமிழக கோவில் சொத்துக்கள் விவகாரம்: அரசுக்கு பாராட்டு

பதிவு செய்த நாள்

21 மே
2021
09:05

 தொண்டாமுத்தூர்: தமிழக அறநிலையத்துறையின் கீழ், உள்ள கோவில்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற முடிவிற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், கோவில் நிர்வாகம், அலுவலர்கள் பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களையும்; கோவில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளையும்; கோவில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்கள்; கோவில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளில் உரிமை ஆவணங்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின், இந்த முடிவிற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது டுவிட்டர் பக்கத்தில்,அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுக்கள். சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமை பாராட்டுக்கள். வெளிப்படைத்தன்மை தான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். முன்னதாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தின் மூலம், அறநிலையத்துறையின் வரவு செலவு கணக்குகளை வெளி தணிக்கை செய்ய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் நிலங்களுக்கு தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து அதை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar