Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா பணிகளில் கோவில்கள் சார்பில் ... திருத்தணி கோவில் மூலம் தினமும் 750 பேருக்கு உணவு திருத்தணி கோவில் மூலம் தினமும் 750 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் கொள்ளை முயற்சி: ரூ.1.15 லட்சம் காணிக்கை தப்பியது
எழுத்தின் அளவு:
கோவிலில் கொள்ளை முயற்சி: ரூ.1.15 லட்சம் காணிக்கை தப்பியது

பதிவு செய்த நாள்

28 மே
2021
10:05

 கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் நேற்று அதிகாலை அர்ச்சகர் ரவி, பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.


உள்ளே சென்று பார்த்தபோது, மூன்று உண்டியல்களின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றிருப்பது தெரியவந்தது.தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், நள்ளிரவு 1:45 மணியளவில், பைக்கில் வந்த இருவர், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியல்களை உடைக்க முயன்று, முடியாததால் திரும்பிச் சென்றது பதிவாகியிருந்தது.இதுகுறித்து வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவத்தைத் தொடர்ந்து, செயல் அலுவலர் சங்கர் மேற்பார்வையில் கோவிலில் இருந்த 3 உண்டியல்களும் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.அதில் 1.15 லட்சம் ரூபாய் காணிக்கை பணம் இருந்தது. கொள்ளையர்களால் உண்டியல் உடைக்க முடியாததால், காணிக்கை பணம் தப்பியது.பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையம் ஆள் நடமாட்டமின்றி இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar