Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் கோயில்களில் இன்று சனி ... ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்றுத் திருவிழா! ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் ருத்ராட்சமரம் வளரும் அதிசயம்: பொதுமக்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
12:06

மதுரை: கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடிக்கும் மேல் உள்ள நிலப்பகுதியில் மட்டுமே காணப்படும் ருத்ராட்ச மரம் ஒன்று மதுரையில் வளர்ந்திருக்கிறது. மதுரை கோச்சடை பகுதியில் உள்ள நடராஜ் நகரில் இப்படி ஒரு மரம் முளைத்து கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மரத்தை யாரும் இனம் கண்டு கொள்ளாத நிலையில் தற்போது அது அடையாளம் காணப்பட்டு உள்ளது ஆச்சரிய நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை நேபாளத்தில் விளையும் ருத்திராட்சம் தான் தரத்தில் உயர்ந்ததாக கருதப்படுகிறது. மதுரை போன்ற வெப்பம் நிறைந்த நகரங்களில் இவை வளர்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்கிறார்கள் அறிஞர்கள். ஆனாலும் அது இங்கே வளர்ந்து காணப்படுவது தான் விந்தை. இந்த நிலையில் ருத்ராட்சத்தின் சில குணங்களை தெரிந்து கொள்வது இது போன்ற அரிய மரங்களை பாதுகாப்பதற்கும், மதுரை மண்ணில் வாய்ப்பிருந்தால் மேலும் பல இடங்களில் வளர்த்தெடுப்பதற்கும் உதவும்.

இமயமலை, நேபாளம் மற்றும் மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய மரம் ருத்ராட்ச மரம். இந்த மரம் மிகவும் புனிதம் வாய்ந்தது. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் ருத்ராட்ச கொட்டை இறைவன் மற்றும் அடுத்தபடியாக சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் மற்றும் புனிதமாக இருப்பவர்கள் அணியக்கூடியது. இந்த ருத்ராட்ச கொட்டை அணிந்தவர்கள் மிகவும் பக்தி மிக்கவர்கள் என்பர். அந்த அளவிற்கு தெய்வீக சிறப்பு உள்ளது. இந்த மரம் வளர்ந்திருப்பது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரம் மதுரை கோச்சடை நடராஜ் நகர், சீதையம்மாள் வீதியில் தான் வளர்கிறது. தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், சிவனுக்கு உகந்த நாட்களிலும் இந்த மரத்திற்கு தீபமேற்றி, அபிஷேகம், ஆராதனைகள் அந்த பகுதி மக்களால் செய்யப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar