தேனி : தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் வைகாசி 3வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.