மாரியம்மன் கோவில் சார்பில் நோயாளிகளுக்கு மதிய உணவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2021 03:05
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் சார்பில், அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி, உறவினர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், இவர்களுக்கு தற்போதைய ஊரடங்கில் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களுக்கு மதிய உணவு வழங்கிட இந்து அறநிலையத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி மதிய உணவு கொடுப்பதற்காக மாரியம்மன் கோவிலில் சாப்பாடு பார்சல் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.