ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் சன்னதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கூறியதாவது, நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம். முக கவசம் அணிவது மிகவும் அவசியம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.