Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலிப்பட்டி தவசிலிங்க சுவாமி ... விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூன், 3ல் கோவில் பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவி துவக்கம்
எழுத்தின் அளவு:
ஜூன், 3ல் கோவில் பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவி துவக்கம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2021
12:06

சென்னை: கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு, உதவித்தொகையாக, 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு, நிலையான சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோவில்களில் பக்தர்கள் வருகை இல்லை. போதிய வருமானமின்றி, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் எல்லாம், அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்த முதல்வர், கோவில்களில் மாத சம்பளம் பெறாமல் பணியாற்றும், ஒவ்வொரு கோவில் ஊழியருக்கும், 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த உதவித்தொகை மற்றும் பொருட்கள், கோவில் பணியாளர் அல்லாத, கோவில் வழியே உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும். இவ்வாறு, சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar