மூலிப்பட்டி தவசிலிங்க சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2021 02:06
விருதுநகர்: விருதுநகர் அருகே மூலிப்பட்டியில் மூலிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான பழமை வாய்ந்த தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கவில்லை.