திருத்தணி: திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவின், எட்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் நட ந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொேரானா தொற்று பரவல் காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியின்றி அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.