மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2021 11:06
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அடுத்தவாரம் தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. இதற்காக தந்திரி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளார்.
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த 2ம்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோயிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும்பணிகள் நடந்து வருகிறது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் அடுத்தவாரம் தேவபிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேவபிரசன்னம் பார்ப்பதற்கு 9 கேரள தந்திரிகளை கோயில் நிர்வாகம்அழைத்துள்ளது. அம்மன் சன்னதியில் குலுக்கல் முறையில் ௯ பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். குலுக்கல் முறையில் தேர்வாகும் தந்திரியே தேவபிரசன்னம் பார்ப்பார். தேவபிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது.