நஞ்சன்கூடு: ‘நஞ்சன்கூடு கண்டேஸ்வரா கோவில் வளாகத்தில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை முடி விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் கோவிலுக்கு தான் சொந்தம்’ என, டி.நர சிபுரா சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மை சூரு மாவட்டம், நஞ்சன்கூட்டில் கண்டேஸ்வரா சுவாமி கோவில் அமை ந்துள்ளது. இக் கோவில் வளாகத்தில் பாரம்பரியமாக நயனஜ ஸ்த்ரியர்கள், பக்தர்களுக்கு மொட்டை அடித்து வருகின்றனர். முடி விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை , அவர்களே எடுத்து கொள்கின்றனர். இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோவில் சார்பில், 25 ஆண்டுகளுக்கு முன், டி.நர சிபுரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், முடி விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் கோவிலுக்கு தான் சொந்தம் என்று நேற்று தீர்ப்பு அளித்தது. இதே வேளையில் மொட்டை அடிக்கும் உரிமை , நயனஜ ஸ்த்ரியர்கள் சமுதாயத்தினர் அனைவருக்கும் உண்டு என்றும் கூறியுள்ளது.