சித்தி விநாயகர் கோயிலில் கோரிக்கை ஏற்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2021 06:06
திருநகர்: மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்கள் விநாயகர், மீனாட்சி அம்மன், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர், குருவாயூரப்பன், சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை, வடுக பைரவர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை கோயில் நடை சாத்தப்பட்டு தினமும் இரண்டு கால பூஜைகள் மட்டும் நடக்கிறது. பக்தர்கள் கோரிக்கை: வெகு நாட்களாக கோவில் நடை சாத்தப்பட்டு இருப்பதால் சுவாமியை தரிசனம் செய்ய முடியவில்லை. காணிக்கை செலுத்த முடியவில்லை என பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பெரிய கதவுகள் திறக்கப்பட்டு கோயில் முன்பு உண்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை.