திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி மாதம் 11 நாட்கள் ஊஞ்சல் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழா நாட்களில் கோயில் திருவாச்சி மண்டபத்தில் அமைக்கப்படும் ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆட்டம் நடைபெறும்.
திருவிழாவின் கடைசி நாள் உற்சவர்கள் முன்பு மா, பலா, வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். தற்போது கொரோனா தடை உத்தரவால் கோயில் நடை சாத்தப்பட்டு காசுவாமிகளுக்குல பூஜைகள் மட்டும் நடக்கிறது. இந்த ஆண்டு ஜூன் 15ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கி ஜூன் 25 வரை நடக்க வேண்டும். ஆனால் ஜூன் 21 வரை அரசு தடை உத்தரவு இருப்பதால் திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜூன் 21க்கு பின்பு கோயில்கள் திறக்கப்பட்டால் ஜூன் 25ல் முப்பழ பூஜை மட்டுமாவது நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.