Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ஊஞ்சல் ... ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாயகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
03:06

மயிலாடுதுறை : வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் செல்வ முத்துக்குமார சுவாமி சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் பக்தர்களின் நோய்களைப் போக்கும் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இக்கோவிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை தரிசித்து கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றன 48ம் நாள் முடிவில் மண்டல பூஜை பூர்த்தி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரர் செவ்வாய் பகவான் சுவாமி அம்பாள் மற்றும் செல்வ முத்துக்குமார சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அப்போது சுவாமி அம்பாளுக்கு 1008 கலச அபிஷேகமும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. முன்னதாக ருத்ர வேத பாராயணம் ஜபம் திருமுறைகளை பாராயணம் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது யாக பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி இந்த பூஜைகள் நடத்தப்பட்டன அதனால் சிவாச்சாரியார்கள் திருமடம் மற்றும் கோவில் சிப்பந்திகள் உள்ளிட்ட சொற்ப எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar