பதிவு செய்த நாள்
17
ஜூன்
2021
04:06
கோவை:பெண்கள் அர்ச்சகராவதை அரசியலாக்க வேண்டாம். தர்க்கரீதியாகவும் விவாதிக்க வேண்டாம், என்று பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பெண்கள் அர்ச்சகராவதை, அரசியல் ஆக்கக்கூடாது. தர்க்கரீதியாக விவாதமும் செய்யக்கூடாது. இவையனைத்தும், இறைவனுடைய நம்பிக்கை சார்ந்த ஆன்மிக விஷயம். பெண் அர்ச்சகர்களாக தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இன்றளவும் குலதெய்வ கோவில்களில், பெண்களால் வழிபாடு நடத்தப்படுகிறது. கோவில்களின் கருவறைக்குள் சென்று நடத்தும் பூஜை என்பதால், முழுமையான பயிற்சி அவர்களுக்கு தேவை.சைவத்துக்கும், வைணவத்துக்கும் ஏற்ப பயிற்சி அளிப்பதோடு, பெண்களின் மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை அளித்து, அவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வழிபாட்டு முறையில் புனித தன்மை எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. கருவறையில் பூஜை செய்வது என்பது, இறைநம்பிக்கை சார்ந்த விஷயம், அதை மேற்கொள்ளும் நம்பிக்கைக்கு உரியவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படக்கூடாது. முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு, அர்ச்சகராக வேண்டும். அதற்கு, தமிழக அரசு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு உருவாக்க வேண்டும். பயிற்சிமுறைகளையும் அளிக்க வேண்டும். இவ்வாறு, பேரூராதீனம் கூறினார்.