துாத்துக்குடி கிராம கோயில் பூசாரிகளுக்கு நிவாரண பொருள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2021 04:06
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் 502 கிராம கோயில் பூசாரிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் பணமும் , மளிகை பொருட்களும் கொரோனா நிவாரணமாக வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள் துாத்துக்குடி வந்தது. சிவன் கோயிலில் பாதுகாப்பான அறையில் இவை அனைத்தும் அடுக்கி வைப்பட்டு மளிகை பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டது. இந்த பணிகளை அறநிலையத்துறை துாத்துக்குடி, தென்காசி மாவட்ட இணை ஆணையரும், திருச்செந்துார் கோயில் இணை ஆணையருமான அன்புமணி ஆய்வு செய்தார். அறநிலையத்துறை துாத்துக்குடி உதவி ஆணையர் ரோசாலி சுமதா, சிவன் கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, வேம்படி இசக்கியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி சாந்திதேவி, ஆய்வாளர் சிவலோக நாயகி ஆகியோர் உடனிருந்தனர். கோயில் ணியாளர்கள் முகசுந்தரம், விநாயகம், சுப்பையா மற்றும் பணியாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டனர். துாத்துக்குடி, திருச்செந்துார் ஆகிய இடங்களில் வைத்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்குகின்றனர்.