Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரமா காளியம்மன் கோயில் திருவிழா ... சிவாலயங்களில் கொரோனா தொற்று நீங்க வழிபாடு சிவாலயங்களில் கொரோனா தொற்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழா: பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழா: பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
08:06

காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழா முன்னிட்டு இன்று (23ம் தேதி) பிசாண்டமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாங்கனி திருவிழா மிகவிமர்ச்சியாக நடைபெறும்.

இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக மாங்கனித்திருவிழா எளிய முறையில் கைலாசாநாதர் கோவில் கடந்த 21ம்தேதி மாப்பிள்ளை நடைபெற்றது.நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் அன்று அழைக்கப்படும் புனிதவதியார்,பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது.இரவு வெள்ளை சாற்றி புறப்பாடு நடைபெற்றது. இன்று (23ம் தேதி) ஸ்ரீபிசாடன மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு பல்வேறு திரவங்கள் மூலம் அபிஷேகம் நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர், அம்பாள், வள்ளி தெய்வாணை, சமேதராக முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது. பின் சந்தனம்,மஞ்சள்,பால்,தேன், பன்னீர்,அண்ணம்,பழரசங்கள்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் முக்கிய  நிகழ்ச்சியான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி இன்று 24ம் தேதி காலை 9.30 மணிக்கு ஸ்ரீபிட்சாடணமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி (உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறுகிறது).மதியம் அம்மையார் மாங்கனியுடன் ஈசனுக்கு அமுதுபடைத்தல் நிகழ்ச்சி,இரவு பரமதத்த செட்டியார் இரண்டாவது திருமணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன்,கோவில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன்,துணைத்தலைவர் ஆறுமுகம்,செயலாளர் பக்கிரிசாமி,பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட உபயதார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட பக்தர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.மாங்கனி நிகழ்ச்சிகள் அனைத்தும் (www.karaikaltemples.com)என்ற யூடியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் ஒளிப்பரப்ப கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar