Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொன்மை வாய்ந்த கொற்றவை வழிபாடு! உலகளந்த பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் உலகளந்த பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பொலிவு பெற்று வரும் கண்டியம்மன் கோவில் வளாகம்
எழுத்தின் அளவு:
புதுப்பொலிவு பெற்று வரும் கண்டியம்மன் கோவில் வளாகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
03:06

 உடுமலை : உடுமலை அருகே, சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. இரு கருவறை ஒரே தெய்வம், என பல சிறப்புகளை கொண்ட இக்கோவிலை சுற்றிலும், மேற்பரப்பு ஆய்வில், பல்வேறு தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டன.

பல நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, இக்கோவிலுக்கு மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், நிலங்களும், தானமாக அளிக்கப்பட்டு, தேரோட்டமும் நடந்து வந்துள்ளது. பல்வேறு காரணங்களால், கோவில் முறையான பராமரிப்பின்றி, நடன மண்டபத்துாண் இடிந்து விழுந்தது.மேற்கூரையில், செடிகள் முளைத்து, மழைக்காலத்தில், மழை நீர் கோவிலுக்குள் விழும் நிலை ஏற்பட்டது. ஆக்கிரமிப்பால், தேரோடும் வீதி சுருங்கியது.இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலை பழமை மாறாமல், புதுப்பித்து, தர வேண்டும் என அப்பகுதி மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், நிதி ஒதுக்கீடு இழுபறியாக உள்ளது.தங்கள் பகுதியின் தொன்மையை பறைசாற்றும் கோவிலின் நிலையை மாற்ற, பக்தர்கள் ஒருங்கிணைந்து, பணிகளை துவக்கினர். முதற் கட்டமாக, மேற்கூரையில் இருந்த செடிகள், அகற்றப்பட்டு, செப்பனிடப்பட்டது. மண்டபத்துாண் இடிபாடுகள் சீரமைக்கப்பட்டது. சுற்று பிரகாரத்தில், செடி, கொடிகள் அகற்றப்பட்டது. தற்போது, முன்மண்டபத்தில் இருந்து கொடி மரம் வரை, நடைபாதை அமைத்து, செடிகள் நட்டு பராமரிக்கின்றனர். இதனால், பொலிவிழந்து காணப்பட்ட, கோவிலின் முன்பகுதி தற்போது, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

இந்து அறநிலையத்துறையினர், கோவில், புனரமைப்பு பணிகளை துவக்கினால், அனைத்து வகைகளிலும், உதவவும் பக்தர்கள் தயாராக உள்ளனர்.பக்தர்கள் கூறுகையில், பழமை வாய்ந்த, கண்டியம்மன் கோவில், சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிக்கு, பெருமை பெற்றுத்தருவதாக முன்பு இருந்தது. காலப்போக்கில், சில மாறுதல்களால், கோவில், பொலிவிழந்து தற்போது, அனைவரின் பங்களிப்புடன், பணிகள் நடக்கிறது. இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த அரசு உதவ வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar