Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான ... திருமலைக்கோயிலில் வேண்டாமே .. சிறப்பு கட்டண தரிசனம் முறை! திருமலைக்கோயிலில் வேண்டாமே .. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கெங்கையம்மன் கோவில் திருவிழா: ஜூன் 27ம் தேதி சிரசு ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
10:06

திருப்பத்தூர்: திருப்பத்தூர், கெங்கையம்மன் கோவில் திருவிழாவின் சிகரமாக சிரசு ஊர்வலம், வரும் 27ல் நடக்கிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கெங்கையம்மன் கோவில், 80வது ஆண்டு திருவிழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. இரவு 7 மணியளவில், கெங்கையம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தினசரி, காலை, மாலை இருவேளையும், சிறப்பு அலங்காரத்தில், அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் சிகரமாக, வரும் 26ல், காலை 9 மணிக்கு கெங்கையம்மன், சக்தி மாரியம்மன், பொன்னியம்மன், மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணியளவில், திருப்பதி கெங்கையம்மனை அழைத்தல், பகல் 12 மணியளவில் சக்தி மாரியம்மன், கெங்கையம்மனுக்கு, பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மாலை 5 மணியளவில், பூங்கரகம் முக்கிய வீதிகளில் கொண்டு வரப்பட்டு கோவிலை சென்றடைகிறது. மறுநாள் 27ம் தேதி அதிகாலை 4 மணியளவில், சகலபம்பை, தாரை, தப்பட்டை, நாதஸ்வர கச்சேரி முழுங்க பெரிய குளத்தில் இருந்து திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம் வந்த பின், பகல் 1.35 மணியளவில் கோவிலை வந்தடைகின்றன. அப்போது, வீதியின் இருபுறமும் திரண்டு வரும் பக்தர்கள், உப்பு, மிளகு உள்ளிட்ட தானிய வகைகளை அம்மன் சிரசு மீது வீசி, பிரார்த்தனையை நிறைவேற்றுவர். தொடர்ந்து, மாலை 4 மணியளவில், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 8 மணியளவில், கண்கவர் வாண வேடிக்கையும், 9.30 மணியளவில் மேள, தாளம் முழங்க திருப்பதி கெங்கையம்மன் சிரசு புறப்பட்டு, பெரியகுளத்தை சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 
temple news
திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.திருவேற்காடு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar