* தர்மம் இருக்குமிடத்தில் தான் தெய்வம் குடிகொண்டிருக்கும். * தர்மத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் மற்ற நல்ல விஷயங்களில் நம்பிக்கை ஏற்படாது. * வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே. * தர்மத்தை முழுமையாக ஏற்று வாழ்வதே கல்வி கற்றதன் அடையாளம். * தர்ம வழியில் சம்பாதிப்பதோடு வேதம் விதித்தபடி நல்வாழ்வு நடத்துங்கள். * புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை அடைவான். * கோபத்தை கைவிட்ட மனிதனை துன்பங்கள் நெருங்குவதில்லை. * உயிருள்ள வரை உடன் பிறந்த குணங்கள் ஒருவனை விட்டு நீங்காது. * பிறருடைய குற்றங்களை மன்னிப்பவன் மனிதன். மறப்பவனோ தெய்வம். * லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுப்படுத்துவது அவசியம். * கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். எல்லா நன்மைகளும் சேரும். * தேவையற்ற பேச்சால் நேரம் வீணாகும். திட்டமிட்ட செயல்களும் நிறைவேறாது. * பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியும் முட்டாள் ஆகி விவான். * தீய ஆசைகளால் துாண்டப்பட்டவன் தனக்குத் தானே அழிவைத் தேடுகிறான். * புலன்களின் கவர்ச்சியானது நல்ல அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்யும்.