ஒரு மனிதன் தன் தேவையைக் கூறி பிரார்த்தித்தால் இறைவன் கேட்டத்தைத் தருவான். ஒருவேளை கிடைக்காவிட்டால் இப்போது வைத்த கோரிக்கையை மறுமைக்காக சேகரித்து வைக்கிறான். இப்படி பிரார்த்தனை என்பது வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. இதை ‛துஆ’ என்பர். பிரார்த்தனையில் ஈடுபடும் மனிதர்கள் மனத்துாய்மை, ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அசுத்தமான உணர்வு, தவறான எண்ணம் சிறிதும் கூடாது. ‘தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், துாய்மையை மேற்கொள்பவர்களையும் இறைவன் நேசிக்கிறான்’ என்கிது குர்ஆன்