Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ... கிடப்பில் விடப்பட்ட கண்ணகி கோயில் சீரமைப்பு பணி கிடப்பில் விடப்பட்ட கண்ணகி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் அரண்மனை 2ம் பாகம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் அரண்மனை 2ம் பாகம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2021
07:06

 பெரம்பலுார் : கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் நடந்து வரும் அகழாய்வு பணியில், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, அரண்மனையின் இரண்டாம் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை மூலம், 2020-21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகளுக்கு, கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. அதன்படி, தமிழகம் முழுதும் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு என்னும் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. தற்போது, ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த, 14ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியது.

மாளிகை மேட்டில் நடந்த அகழாய்வு பணிகளில், ஏற்கனவே கூரை ஓடுகள், பானை ஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்து, தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர் கடந்த மாதம் தென்பட்டது. தற்போது மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கிய நிலையில் அரண்மனையின் இரண்டாவது பாகமும் கண்டறியப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் மாளிகைமேடு என்னும் பகுதியில் தான் அரண்மனை அமைத்து இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அந்த வகையில் தற்போது அரண்மனையின் இரண்டாவது பாகம் கிடைக்கப் பெற்று இருப்பது, சோழர்களின் வரலாற்று சுவடுகளை உறுதி செய்கின்றன என்றும், சோழர்களின் வரலாற்று அரிய பொக்கிஷங்கள் இன்னும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; தமிழகம் வந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar