Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
62 கோவில்களின் நிலை உயர்த்தி உத்தரவு சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கான 2.2 ஏக்கர் நிலம் அதிரடி மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
09:06

குரோம்பேட்டை: நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது. அகதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம் இறைவன் சொத்து மீட்கப்படும் என்றார் சேகர் பாபு குரோம்பேட்டை நெமிலிச்சேரியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.பழைய பல்லாவரத்தில், பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, இக்கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம் உள்ளது.அகற்றப்படும்அந்த நிலத்தை 2012ல் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, மெக்கானிக் கடை, பழைய இரும்பு குடோன் என 11 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.

இதையறிந்த அதிகாரிகள், 2017-ல் ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு - 78-ன் கீழ், நடவடிக்கை மேற்கொண்டனர். ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.அந்த நீதிமன்றம், 2018ல் வெளியேற்று உத்தரவை பிறப்பித்தது. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனரகம் உத்தரவின் படி, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கும் பணி, நேற்று காலை துவங்கியது.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன், ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஒப்படைப்பு: இப்பணியை ஆய்வு செய்த பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை, யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அவற்றை அகற்றி சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அகஸ்தீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு உட்பட, 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar