ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2021 10:07
ராமேஸ்வரம்:ஆனி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். கொரோனா பரவலால் கடலில் குளிக்க தடை இருந்தாலும், அதனை பொருட்படுத்தாத பக்தர்கள், தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்தத்தில் நீராடினர்.ஆனால் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தடை நீடிப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.