திருப்புவனம்: ஆனி கடை சி வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று மடப்புரத்தில் ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர். மடப்புரம் காளி கோயிலில் 45 நாட்களுக்கு பின் கோயில் திறக்கப்பட்டதால் உச்சி கால பூஜையில் அம்மனை தரிசிக்க ஏராளமான பெண்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் யாரும் இல்லாததால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பெண்கள் கோபுரத்தின் முன்னால் விளக்கேற்றி வழிபட்டனர். வரும் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர்.