தேவகோட்டை: தொற்றின் இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் வரும் முதல் அமாவாசை என்பதால் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் நேற்றைய ஆனி மாத அமாவாசையை 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருமாம். ஆனி மாதத்தில் வெள்ளிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் அமாவாசை வருவது சிறப்பாம். அன்றைய தினத்தில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வாழ்வில் நன்மைகள் கிடைக்குமாம். இதன் காரணமாக கண்டதேவி உட்பட பல இடங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசையை முன்னிட்டு பிருத்தியங்கிரா தேவி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர். கோயில் ஸ்தாபகர் கருப்பு குருக்கள் பூஜைகளை நடத்தினார்.