கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சதுர்முக முருகன் கோயிலிலும் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.