மேட்டுப்பாளையம்: அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில் உள்ள, தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும் அபிஷேகமும் செய்யப்பட்டது. நேற்று காலை, 5:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. பின்பு தேவி கருமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்ததை தொடர்ந்து, 6:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு விடப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால், அமாவாசை நாளை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். சிறுமுகையை அடுத்த சென்னம்பாளையத்தில், எமதர்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு, சுவாமிக்கு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.