தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில், ஆனி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி வழிபட்டனர். கொரோனா பாதிப்பின் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே நவபாஷாணத்தில் நீராடினார். நவபாஷாணத்திற்கு வந்திருந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு கடல் நீரில், எள் பிண்டம் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.