சபரிமலை,-ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 16 மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறைவான ஊழியர்களுடன் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஜூலை 17 காலை முதல் தினமும் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் 5ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். முன்பதிவு இன்று மாலை தொடங்கப்பட உள்ளது.