அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு யாகம் நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் முக கசவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.