திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2021 03:07
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் மூன்றாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. மூலவர் நம்பெருமாள் மற்றும் ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் தாயார் மற்றும் அவதார மூர்த்திகள், உற்சவமூர்த்திகளுக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம்நடந்தது. தொடர்ந்து, வேங்கடேச பெருமாள் மற்றும் தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தனர்.