புதிய நெத்திபட்டை : ராமேஸ்வரம் கோவில் யானை உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2021 03:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் யானை ராமலட்சுமி புதிய நெத்திபட்டை அணிந்து உற்சாகத்துடன் வலம் வந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள யானை ராமலட்சுமிக்கு, இக்கோவில் பக்தரான சென்னை சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.எஸ்.பி., ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் செலவில் யானைக்கு நெத்திபட்டை, கழுத்து செயின் வழங்கினார். கேரளா திருச்சூரில் தங்க பாலீஷில் நேர்த்தியாக தயாரித்த நெத்திபட்டையை நேற்று கோவில் பாகன் ராமலட்சுமிக்கு அணிவித்தார். புதிய நேத்திபட்டை அணிந்த ராமலட்சுமி உற்சாகத்தில் கோவில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்தது.