திட்டக்குடி: ஆடிபிறப்பையொட்டி பெருமுளை முத்துமாரியம்மன் கோவிலில், பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்றுமுன்தினம் ஆடி பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரவும், விவசாயம் செழிப்படைய வேண்டி பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர். கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.