பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழாவில், சேஷ வாகனத்தில் பெருமாள் வைகுண்ட நாதனாக அருள்பாலித்தார். இன்று பெரிய திருவடியான கருட வாகனத்தில் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து விழாவில் பங்கேற்றனர்.