Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் ஆடி பிரம்மோற்ஸவ விழா : ... பராசக்தி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பராசக்தி அம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலம் எல்லாம் காத்தருள்வாய், அய்யனே!: கிராம கோவில்களில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
காலம் எல்லாம் காத்தருள்வாய், அய்யனே!: கிராம கோவில்களில் குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2021
04:07

திருப்பூர்;சமீபத்தில், ஒரு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், தொழில், மழை, கல்வி வளம் சிறப்பாக இருக்க, கிராம தேவதைகள் வழிபாடு அவசியம் என்று, வலியுறுத்தியிருந்தார்.ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற காவல் தெய்வங்கள், குலதெய்வக் கோவில்களுக்கு, பக்தர்கள் கூட்டம், முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகிறது.

ஆடி மாதமும் துவங்கியுள்ளதால், மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் குவிகின்றனர்.கொங்கு மண்டலத்தில், அண்ணன்மார் சாமி வழிபாடு சிறப்பானது; பல்வேறு ஊர்களில் அண்ணன்மார் சாமி கோவில் இருக்கும். பொன்னர், சங்கர் அண்ணன்மார் என்ற பெயரில் தெய்வமாக வழிபடுகின்றனர்.பெரிய குதிரைகளின் மேல் அமர்ந்தவாறு பொன்னர், சங்கர் சிலைகள் அமைந்திருக்கும். அண்ணன்மார் சாமி கதைப் பாடல் பிரசித்தி பெற்றது. இக்கதையை உடுக்கையடித்து பாடலாகப் பாடுவர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், கிராம கோவில்களாக இருந்தவை, தற்போது பிரசித்தி பெற்ற தலங்களாகவும் மாறியிருக்கின்றன.வழிபட ஏற்ற தருணம்பக்தர்கள் கூறியதாவது:ஆடியில் துவங்கி, மார்கழி வரை தட்சணாயன காலம். வழிபாடு, பூஜைகளுக்கு இது ஏற்ற தருணம்.குறிப்பாக, குலதெய்வங்களை வழிபடுவதற்கு ஆடி மாதம் ஏற்றது. கிராம தெய்வங்களுக்கான மாதம் என்பதால், எல்லை தெய்வ வழிபாடு தற்போது களைகட்டியுள்ளது. மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி, அங்காள ஈஸ்வரி, காளியம்மன், சப்த கன்னிகை, மதுரைவீரன், காத்தவராயன், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, கருப்பராயன், அய்யனார் முதலான தெய்வங்கள் அதிகளவில் வழிபடப்படுகின்றன.நேர்த்திக்கடன்கடந்த ஒன்றரை ஆண்டாக, தங்கள் கிராமங்களுக்கோ, குலதெய்வ கோவிலுக்கோ செல்லாதவர்கள் தற்போது அதிகளவில் இக்கோவில்களுக்கு செல்கின்றனர்.கொரோனா குறைய வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் வேண்டுதல்கள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள், மொட்டையடித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தியும் வருகின்றனர்.சில கோவில்கள், திருவிழாக்களின் போது மட்டுமே திறக்கப்படுபவை. தற்போது திருவிழாவாக கொண்டாட முடியாவிட்டாலும், வழிபாடு என்பது, உரிய காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar