புதுச்சேரி : உருளையன்பேட்டை பராசக்தி அம்மன் கோவிலில், இன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. புதுச்சேரி, உருளையன்பேட்டை கலியுக பராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 51ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது.இதையொட்டி, நேற்று காலை 9:30 மணிக்கு கணபதி பூஜை, லலிதா சகஸ்கரநாம ஹோமம், சக்தி பூஜை நடந்தது.இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்புறத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணி அளவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.