திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் மூக இடைவெளி இல்லாமல் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழக அரசு கடந்த 5ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்தது. இதையடுத்து, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி காலை 6 ணி முதல் காலை 6 ணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பக்தர்கள் முடிக்காணிக்கை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
கடல் மற்றும் நாழிக்கி கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த 15ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களாக கோவிலில் தினசரி பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 15ம்தேதி சஷ்டி திதி சுவாமிக்கு விசேஷமான நாள், 16ம் தேதி மாதாந்திர வெள்ளிக்கிழமை, 17ம்தேதி (சனிக்கிழமை) ஆடி மாத பிறப்பு ஆகிய நாட்களில் பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதுமே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கணப்படும் . அதனால் தொடர்ந்து 4 நாட்களாக கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று கடந்த 3 நாட்களை விட கூடுதலாக பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர்கள் பொரும்பாலானோர் முக கவசம் அணிந்து இருந்தனர். ஆனால் சுவாமி தரிசனத்திற்கு வரிசை நின்ற பக்தர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை.