நடராஜர் பெருமாள் கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2021 05:07
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அகோபில நரசிம்மர் பெருமாள் கோயில் மற்றும் நடராஜர் கோவில்களுக்கு நிலம் உள்ளது. நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் கோயிலுக்கு வாடகை, குத்தகை பணம் தராமல் பல ஆண்டுகளாக கையகப்படுத்தி வைத்துள்ளனர். கோயிலுக்கு வருமானம் இல்லாததால் நடராஜர் கோவில் திருப்பணி 5 ஆண்டுக்கு மேலாக நின்றுபோய் உள்ளது. இதனை எடுத்து செய்வதற்கு செலவு கூடுதலாகும் என்பதால் யாரும் முன்வரவில்லை. மேலும் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பத்திற்கு நீர் வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமிப்பாளர்கள் அடைத்து விட்டதால் தெப்பத்திற்கு நீர் வருவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி தெப்பத்திற்கு நீர்வரத்து ஏற்படுத்தி தெப்பத் திருவிழா நடத்த வேண்டும். கோயில் சொத்துக்களை மீட்டு திருப்பணியை விரைவில் செய்ய வேண்டுமென ஆன்மிகவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.