ராமர் திருக்கோலத்தில் சவுந்தரராஜ பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2021 09:07
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியையொட்டி 13 நாள் திருவிழா நடக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவலால் கோயில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி தரப்படவில்லை. பக்தர்களுக்கு தரிசன அனுமதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று ராமர் திருக்கோலத்தில் சவுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜூலை 22 மாலை திருக்கல்யாணம், ஜூலை 23ல் தேரோட்ட நாளில் காலை 9:15 மணி - 10:15 மணிக்குள் வளாகத்திற்குள் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும். திருவிழா உற்ஸவ நிகழ்வு நேரம் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.