காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், ஊரடங்கால் பக்தர்கள் வருகை குறைந்ததால், உண்டியல் காணிக்கையும் குறைந்தது.காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படும்.கொரோனா இரண்டாம் அலையால் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்து வந்தது. தற்போது ஊரடங்கு தளர்வால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று, உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது.ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை தடைபட்டு, உண்டியல் காணிக்கை குறைவாக உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.