முதுகுளத்துார்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
முதுகுளத்துார், மு.துாரி, செல்வநாயகபுரம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட செல்லியம்மன் கோயில் 45 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சங்கரலிங்க அய்யனார் கோயிலில் இருந்து நேர்த்திகடனாக பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக செல்லி அம்மன் கோயில் வந்தனர்.பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்தனர்.