பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
05:07
மதுரை : மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமிகள் கோயிலில் இன்று (23ம் தேதி) காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிராக ஹோமம், யாக சாலை பூஜைகளுடன் உற்சவம் துவங்கியது. பதினோரம் நாள் தபசு காட்சி காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சங்கர லிங்கம் சுவாமியும், கோமதி அம்மனும், ஒன்றாக பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முன்னதாக ஸ்வாமிகளுக்கு, எண்ணை காப்பு சாற்றி, 15 வகையான அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், அரசு வழிகாட்டுதலின்படி, மாலை நேர பூஜையில் கலந்து கொண்டு, சிவபுராணம், கோளாறு பதிகம், அம்மன் திருப்பதிகங்கள் பாராயணம் செய்தனர். கோமதி அம்மனும், சங்கர நாராயணரும், சங்கரலிங்கம் ஸ்வாமியும் சிறப்பு அலங்காரத்தில், கோயிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். கோயில் அர்ச்சகர்கள் ராஜேஷ், அரவிந்த், உலகநாதன், ஒதுவார் குமார், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.