காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோயிலில் குரு பூர்ணிமா, வியாச பூஜை நடைபெற்றது.
இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். இங்கு இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு, ஆதிசங்கரர் உற்சவ மூர்த்திக்கு கோயில் பஞ்ச கங்கையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆச்சார்யாரின் சாமாதி சன்னதிக்கு அருகிலுள்ள மண்டபத்தில் வியாச பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.