பதிவு செய்த நாள்
26
ஜூலை
2021
10:07
நெகமம்: பொள்ளாச்சி அடுத்துள்ள, காட்டம்பட்டிபுதுாரில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள், முருகர், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், பொதுமக்கள் பங்கேற்ற நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு திருவோண நட்சத்திரத்தில் அவதரித்த பெருமாளுக்கு, 16 வகையான திருமஞ்சனங்கள் சார்த்தப்பட்டு, வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.பவுர்ணமி பூஜைபொள்ளாச்சி - உடுமலை ரோடு மரப்பேட்டை பாலம் அருகே, அழகு நாச்சியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.