காஞ்சியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87வது ஜெயந்தி விழா மற்றும் சாதுர்மாஸ்ய விரத வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2021 04:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மணி மண்டபத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87 வது ஜெயந்தி மஹோட்சவ விழா மற்றும் சாதுர்மாஸ்ய விரத வழிபாடு நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு, மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், ஏகாதச ருத்ர ஹோமம், வேத பரயணம் நடைபெறுகிறது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு, ரிக் வேத சம்ஹித பராயணம், ரிக் வேத கானா பராயணம் செய்தார். மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மாண்புமிகு எம். வெங்கையா நாயுடு, மாண்புமிகு தமிழ்நாடு, ஆளுநர் மாண்புமிகு திரு பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கின்றனர். விழா நிகழ்ச்சிகள் காமகோடி டீவியில் மாலை 5.00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விழாவில் மாண்டோலின் யு. ராஜேஷ்ன் நாட சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.