பதிவு செய்த நாள்
26
ஜூலை
2021
04:07
அவிநாசி:அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று காலை பார்வையிட்டார்.கோவில் முழுவதையும் சுற்றி பார்த்த அமைச்சர், சுவாமி தரிசனம்செய்தார். திருமுருகநாதர் சன்னதி முன் இருந்த தகரத்தால் ஆன பந்தலை அகற்றி, கருங்கல் மண்டபம் கட்ட உத்தரவிட்டார். தீர்த்த கிணற்றை பார்வையிட்டு, கிணற்றை சுத்தப்படுத்தி, பராமரிக்குமாறு கூறினார்.பக்தர்கள் சிலர், அமைச்சரிடம் கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான, 40 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ளவழக்கை விரைவாக முடிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்த, 40 சென்ட் பரப்பளவிலான பூங்கா கடந்த, மூடப்பட்டுள்ளது.பூங்காவை புதுப்பிக்க வேண்டும். கோவில் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள, இரண்டரை ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்.இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.அதன்பின், அவிநாசி சென்ற அமைச்சர் சேகர்பாபு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். -கோவில் தல வரலாறு குறித்து, சிவாச்சாரியார்களிடம் கேட்டறிந்தார். காசி தீர்த்த கிணறு, தெப்பக்குளத்தை பார்வையிட்ட அவர், முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.