திருவாடானை : திருவாடானை கோயில் ஆடிப்பூரத்திருவிழா ஆக.2 ல் துவங்குகிறது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் ஆக.2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ந் தேதி தேரோட்டமும், 13ல் திருக்கல்யாணமும் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது:-ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம் மற்றும் சுவாமி ஊர்வலம் கோயில் உள் பிரகாரத்தில் நடைபெறும். கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறாது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம் என்றனர்.