திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் இன்று 28.07.2021 உண்டியல்கள் திறந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் அர.சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. உதவி ஆணையார்கள் கு. கந்தசாமி , செ.மாரியப்பன் , மேலாளர் திருமதி உமாமகேஸ்வரி ,உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ,திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 44, 93, 020ம் , தங்கம் 94 கிராமும் , வெள்ளி 817 கிராமும் மற்றும் 50 வெளிநாட்டு ரூபாய்தாள்கள் கிடைக்கப்பெற்றன .